Wednesday, May 16, 2012

பொருள் தேடும் பூமியில் அருள் தேடும் நெஞ்சமே நிறம் மாறும் வாழ்கையில் நிஜம் காணக் கூடுமோ ..... காலம் கலிகாலம் இதில் நேயம் கனவாகும் சோகம் வரவாகும் தினம் துரோகம் பயிராகும் கருவாகும் பெண்மை உருவாகும் போது கொலை வாளை ஏந்த தகுமோ ........ மனிதாபிமானம் பலியாகும் போது மனசாட்சி தூங்கி விடுமோ தொடர்திடும் துயர் பெறும் கதையோ ..... வேதம் பல ஓதும் பல பேதம் தினம் பேசும் வேஷம் பகல் வேஷம் இதுதானே இயல்பாகும் சமுதாயம் என்னும் கடை வீதி தன்னில் சம நேதி என்ன விலையோ ..... அறிவாளி கூட விலை போகும் வாழ்கை இது நாகரீக முறையோ சுகம் தரும் யுகம் வெறும் கனவோ ...... பொருள் தேடும் பூமியில் அருள் தேடும் நெஞ்சமேநிறம் மாறும் வாழ்கையில் நிஜம் காணக் கூடுமோ ....